×

மது அருந்த பணம் தராததால் தந்தையை அடித்து கொன்ற மகன்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாட்டம் உத்திரமேரூர் அருகே காட்டாங்குளம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(70) இவர் காஞ்சிபுரம் ஓரிக்கை அருகே தனது மகளுடன் இளநீர் வியாபாரம் செய்து வந்தார். இவரது மகன் கார்த்திகேயன் (28) கடந்த 26ம் தேதி மது அருந்த தந்தையிடம் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பணம் தராததால் தனது தந்தை கண்ணனை கார்த்திகேயன் சரமாரியாக தாக்கியுள்ளார். காயமடைந்த கண்ணன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கண்ணன் சிகிச்சை பலனின்றி நேற்று  உயிரிழந்தார். இறந்த கண்ணனுக்கு 3 ஆண்கள் 2 பெண்கள் என 5 பிள்ளைகள் உள்ளனர். தந்தையை அடித்து கொலை செய்த  கார்த்திகேயனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. அவர் அங்குள்ள ஒரு மரக்கடையில் வேலை செய்து வந்தார். காஞ்சிபுரம் தாலுகா போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். …

The post மது அருந்த பணம் தராததால் தந்தையை அடித்து கொன்ற மகன் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kannan ,Katangkulam ,Mattam Uthramerur ,Kanchipuram Orikai ,
× RELATED காஞ்சிபுரம் அருகே ஓரத்தூர் பகுதியில்...